பெருங்குடி கிராமத்தில் மதுரை விமான நிலைய இயக்குனரகம் மற்றும் தென்மண்டல லஞ்ச ஒழிப்பு முதுநிலை மேலாளர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மதுரை விமான நிலைய இயக்குனரகம் மற்றும் தென்மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை இணைந்து பெருங்குடி கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், தென் மண்டல லஞ்ச ஒழிப்பு முதுநிலை மேலாளர் திருநாவுக்கரசு முதுநிலை மேலாளர் மகேஷ் மற்றும் பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்ம முருகேசன், கிராம கமிட்டி கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றனர்.