அமெரிக்கா அதிபர் ஜோபைடன் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் பருவநிலை மாற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தன்வீட்டின் அருகே இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வெளியிட்ட கழிவால் தான் சரும புற்றுநோய்க்கு உள்ளாகி யிருந்ததாக கூறினார். இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பியநிலையில் பைடன் அதிபராவதற்கு முன்னரே புற்றுநோயிலிருந்து குணமடைந்துவிட்டாத வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.