ஆசிரியர் தகுதித் தேர்வை முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வை சந்திக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, வரும் டிசம்பரில் இளநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.இந்த நடைமுறை தமிழகத்தில் முதல்முறையாக அமல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.