மதுரையில் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து மாநாட்டிற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மாநாட்டுக்கான வேலைகள்90 சதம் பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக சார்பில் மாநாடு வெற்றி அடைய வலையங்குளம் கருப்பசாமி கோவிலில் கிடாவெட்டி விருந்து வைக்கப்பட்டது.

வலையங்குளம் கருப்பசாமி கோவிலில் நடைபெற்ற கிடா விருந்தினை தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் துவக்கி வைத்தார்.
தமிழக வெற்றிக்கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கல்லணை தலைமையில் கிடா விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது இதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.








