• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த மரங்கள்!!

Byமகா

Aug 29, 2022

நேற்று பெய்த மழை காரணமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் மரம் வேரோடு சாய்ந்தது
மதுரை மாவட்டம் முழுதும் கடந்த சிலநாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையின் விபத்து மற்றும் முதலுதவி பிரிவு வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட தகவலையடுத்து சாய்ந்த மரத்தை தீயணைப்புத்துறையினர் அகற்றி பாதையை சீர் செய்தனர்.மரம் விழுந்ததில் யாருக்கும் எந்தவொரு பாதிப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.