• Sat. Apr 20th, 2024

கனமழை காரணமாக ரயில்கள் ரத்து

Byகாயத்ரி

Nov 24, 2021

விஜயவாடா ரயில்வே கோட்ட பகுதியில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை புறப்பட வேண்டிய பிலாஸ்பூர் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

அதுபோல், இன்றிரவு 7.10 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம் வழியாக செல்லும் நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக செல்லும் பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 8.10 மணிக்கு புறப்படும் நியூ டெல்லி – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *