திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு விழா கமிட்டியினர் கொடுத்து அழைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் மிகவும் பிரசித்திப்பெற்ற எட்டு சமுதாய மகமை பண்டிற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா அடுத்த வாரம் நடைபெறுவதை முன்னிட்டு விழாகமிட்டியினர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கே. டி. ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது விழா அழைப்பிதழை வழங்கி கௌரவபடுத்தப்பட்டன