நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று ‘தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்திற்கு ‘வாரிசு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜய் நடித்த பீஸ்ட் படம் படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும், வசூலில் சாதனை படைத்தது. பீஸ்ட் படத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார் வம்சி.
பீஸ்ட் படம் வெளியான பிறகு தளபதி 66 படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது. விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக இப்படத்தின் மூலம் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என சீனியர் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக கமிட்டாகி இருக்கிறார். இரண்டு மாதம் முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
பின்பு தற்போது சென்னையில் பரவலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல் போலவே, இப்படத்திற்கு வாரிசு என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் கேசுவலாக கோர்ட் சூட்டில் சேர் மீது அமர்ந்து இருப்பது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
- ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலாசசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் […]
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]
- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]