திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா இன்று (28-ந்தேதி) தொடங்கி அடுத்த டிசம்பர் 7-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான இன்று பகல் 12.15 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், தங்கமயில் வாகனம், தங்கக் குதிரைவாகனம் என்று தினமும் ஒரு வாகனத்திலும் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 5-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கடக லக்னத்தில் கோவிலுக்குள் 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் சிறிய தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக (6-ந்தேதி) மாலை 6 மணிக்கு மேல் கோவிலுக்குள் பாலதீபமும், மலையில் மகா கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இரவு 8 மணியளவில் சன்னதி தெருவில் பதினாறுகால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் நிறைவாக வருகின்ற 7-ந்தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு சரவண பொய்கையில் ஆறுமுகநாத சுவாமி கோவில் வளாகத்தில் தீர்த்த உற்சவம் நடக்கிறது கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு வருகின்ற 6-ந்தேதி வழக்கம்போல தேரோட்டம் நடக்கிறது. பதினாறுகால் மண்டப வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]