சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்
அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்.
பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்கு
போதனைகள் எதற்கு?
எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !
இரண்டையுமே திரும்ப பெற இயலாது
இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும் இல்லை.
செயலில் உறுதியாய் இரு!
பேசும் முன் கேளுங்கள்.
எழுதும் முன் யோசியுங்கள் .
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்…
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்…
தடுமாறி வீழ்வதில் தவறில்லை.
எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு…