விருதுநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழாவின் போது கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு, தன்னார்வலர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்து பக்தர்களின் தாகத்தைத் தீர்த்து மனிதநேயத்தைப் பறைசாற்றி வருகின்றனர்.
விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின் போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அதிகளவில் மக்கள் விருதுநகருக்கு வருகை தருவார்கள். என்றும் இல்லாத அளவுக்கு அந்த நாட்களில் மட்டும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி இருக்கும் காட்சியை பார்க்க முடியும்.
சாதாரண நாட்களிலேயே விருதுநகரில் வெயில் அதிகமாக இருக்கும் அப்படி இருக்கையில் வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த வெயிலிலும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும். வெயிலை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களை குளிர்விப்பதற்காகவே வழிநெடுக மோர் பந்தல், சர்பத் பந்தல் போன்ற குளிர்பான பந்தல்கள் போட்டு அவர்களின் தாகம் தீர்த்து வருகின்றனர் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள்.
இது இன்று நேற்று மட்டும் அல்ல நீண்ட காலமாக பங்குனி பொங்கல் நிகழ்வை ஒட்டியே நடந்து வருகிறது. பங்குனி பொங்கல் என்றாலே திருவிழாவுக்கு அடுத்தபடியாக இந்த குளிர்பான பந்தல்கள் தான் அனைவரது நினைவுக்கு வரும். இந்தாண்டு பங்குனி பொங்கல் திருவிழாவிலும் ஏராளமான குளிர்பான பந்தல்கள் போடப்பட்டு இருந்தன. அதில் தன்னார்வலர்கள் பலர் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு தேடி தேடி சென்று குளிர்பானம் வழங்கினர். சிலர் இதை பொதுமக்களுக்கு செய்யும் சேவையாகவும் இன்னும் சிலர் இதை கடவுளுக்கே செய்யும் சேவையாகவும் நினைத்து செய்து வருகின்றனர். அதனால் தான் இத்தனை ஆண்டுகள் இந்த சேவை பங்குனி பொங்கல் திருவிழாவில் தொடர்ந்து வருகிறது.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]