• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

சட்டம் ஒழுங்கில் சமரசம் கிடையாது…ஸ்டாலின் பளிச்…

Byகாயத்ரி

Mar 10, 2022

சென்னையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், சார்பில் மாநாடு நடைபெறுகிறது.

தலைமை செயலகத்தில் நடைபெறும் மாநாட்டில் ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக ஆட்சியர்கள் திகழவேண்டும். கொரோனோவை எதிர்கொண்டு வெற்றிகரமாக முற்றுப்புள்ளி வைத்து உள்ளோம் என ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை அனுமதிக்கக் கூடாது எனவும் நேர்மையாக ,வெளிப்படைத் தன்மையுடனும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.