• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் உள்ளது..,

ByKalamegam Viswanathan

Aug 10, 2025

காரைக்குடியில் இருந்து சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தடைந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.

மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி..

தேர்தல் ஆணையம் நடத்தியின் மீது பெரிய சந்தேகம் உள்ளது..

6 லட்சம் பேர் தமிழ்நாட்டில் வாக்காளராக மாறிவிட்டார்கள் என கூறுகிறார்கள்..

அவர்கள் எந்த தொகுதியில் வாக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்..

தமிழ்நாட்டில் வேலைக்காக வருபவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எந்த தொகுதியில் வாக்காளராக உள்ளார்கள் என்பதை கூற வேண்டும்..

தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் தன்மையே மாறிவிடும்.. இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது..

வேலைக்காக வந்தவர்களை எப்படி வாக்காளராக சேர்க்க முடியும்.. தமிழ்நாட்டின் வாக்காளர் தன்மையே மாறிவிடும். தேர்தல் ஆணையர் என்பது கிரிக்கெட் அம்பயர் நடுவர்.

மத்திய மாநில கல்விக் கொள்கை தொடர்பான கேள்விக்கு. 11ஆம் வகுப்பிற்கு தேர்வு தேவையில்லை என்பதுதான் என்னுடைய கொள்கை..

அமெரிக்காவே ரஷ்யாவுடன் பல தொடர்புகள் உள்ளது..

பாகிஸ்தான் உடன் அமெரிக்காவுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் தான் வரி போடுகிறார்கள் என்பது போல் உள்ளது. இதனால் கடல் உணவு உள்ளிட்ட பொருட்கள் பாதிப்பு ஏற்படும்.

இந்தியா இல்லாமல் அமெரிக்கா பொருளாதரத்தை நடத்த முடியும் என்பது நடத்த முடியாதது.. கார்த்திக் சிதம்பரம் எம்பி,

டிரம்புடன் மோடி நெருக்கமாக உள்ளார் என்ற வார்த்தைகள் பொய்த்துப் போனது.

தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. எங்கள் பகுதியில் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெரும்.

புதுசாக அரசியல் கட்சி தொடங்குபவர்கள் ஆளுங்கட்சியை தான் விமர்சிப்பார்கள்.. விஜய் குறித்து விமர்சனம்.

காங்கிரஸை விஜய் கூட்டணிக்கு அழைக்கிறாரா.? எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் நாங்கள் சேர்த்துக் கொள்வோமா என்பது திராவிட முன்னேற்ற கழகம்.

இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தலைமை தாங்குகிறோம் தமிழ்நாடு பொருத்தவரைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் கூட்டணி உள்ளது என சிவங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறினார்.