நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு வரப்பட்டதால், மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது.
மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட நீட் தேர்வில் தோல்வியடையும் நிலை உருவானது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.இந்தநிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி புதிய சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனாலும், தமிழக கவர்னர் இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், திடீரென தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு குறித்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த முடிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கவர்னரின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் # GetOutRavi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் #StateRights #BANNEET,#GoBack_TNGovernor போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]