இந்தியாவின் மிக உயரமான நபராகக் கருதப்படும் தர்மேந்திரா பிரதாப் சிங் நேற்றைய தினம் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.
46 வயதான இவர், 8 அடி 1 அங்குலம் உயரத்துடன் கின்னஸ் ரெகார்டு புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திரா பிரதாப் சிங் தங்கள் கட்சியில் இணைந்திருப்பதை வரவேற்றுள்ள சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல், “தர்மேந்திராவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். சட்டசபைத் தேர்தல் நேரத்தில் இவரின் அரசியல் பிரவேசம் எங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
தர்மேந்திரா பிரதாப் சிங் சமாஜ்வாடியில் இணைந்தது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்திரி, “சமாஜ்வாடியின் கொள்கைகள்மீதும், அகிலேஷ் யாதவின் தலைமைமீதும் நம்பிக்கை வைத்து, தர்மேந்திரா பிரதாப் சிங் எங்களோடு இணைந்திருக்கிறார். அவரின் வருகை எங்கள் கட்சிக்கு வலுசேர்க்கும்” என்று கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்த இவர், அசுர உயரத்தின் காரணமாக வேலை கிடைக்காமல் தினறியாதாகவும், அதனால் திருமணம் கூடச் செய்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய உயரத்தால் நான் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், நான் வெளியே செல்லும்போதெல்லாம் மக்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மேலும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால், மக்கள் மத்தியில் நானும் ஒரு பிரபலம் தான்” என்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் பல்வேறு பிரபலங்கள் முதல்முறையாகப் போட்டியிடவுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் உ.பி-யின் மெய்ன்புரி மாவட்டத்திலுள்ள கார்ஹல் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]