• Thu. Apr 25th, 2024

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது.

ராஜகோபாலனின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான காரணங்களை குறித்த காலத்தில் வழங்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. சம்பவம் நடந்தபோது ஆன்லைன் வகுப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல் குண்டாஸ் போடப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *