வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம் என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 59 வது ஆண்டு விளையாட்டு தின விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ளது தியாகராஜர் பொறியியல் கல்லூரி. தமிழகத்தில் தலைசிறந்த கல்லூரியான தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இன்று 59வது ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் அறங்காவலரும் கவர்னிங் கவுன்சில் உறுப்பினருமான ஹரிதியாகராஜன் தலைமை வகித்தார். கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் அருண்பிரேம் விளையாட்டு நிகழ்வுகளின் ஆண்டு அறிக்கையை வழங்கினார். மேலும் கல்லூரியின் முதல்வர் பழனிநாதராஜா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கல்லூரி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் மேலும், குறிப்பாக என்னுடைய தந்தை தான் என்னுடைய பயிற்சியாளர் நான் படித்த பள்ளியிலும் கல்லூரியிலும் ஆசிரியர்களும் நிர்வாகமும் கொடுத்த ஊக்கமே தனது சாதனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்று கூறினார் விளையாட்டு என்பது ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் எந்த பிரச்சனைக்கும் நல்ல தீர்வு எடுக்கும் திறனையும் வளர்க்கும் என்று பேசினார். மேலும் பேசியவர் வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம். மாணவர்கள் போட்டியாளர்கள் அனைவரையும் தனக்கு நிகராக நடத்த வேண்டும் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறாத பார்வை இருக்கும் என்றார்.மேலும், வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் அச்சந்தா சரத் கமல் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.கௌரவ விருந்தினர் அறங்காவலர் மற்றும் முதல்வர் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]