• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான்

ByKalamegam Viswanathan

Jun 29, 2023

ஒ.பன்னீர் செல்வம் பேட்டி..,

அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது.

திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அந்த திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன் என கூறினார்.

பாஜக அண்ணாமலை செய்தியாளர்களிடம் கடுமையாக பேசியுள்ளார். இது குறித்த கேள்விக்கு,

நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் அவர்களுக்கு (பத்திரிகையாளர்களுக்கு)உரிமை உள்ளது. ஜனநாயக கடமை உள்ளது.

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்விக்கு,

கடந்த காலங்களில் இது போல் எதிர்கட்சிகள் பல்வேறு மாநாடு நடத்தியுள்ளனர்.

ஆண்டிகள் கூடிநடத்தியது போல் தான் இருக்கும்.