கர்நாடகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
தலைநகர் தில்லி, ஒமைக்ரான் பாதிப்பில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்கள், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றி மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது…..
தில்லி விமானநிலையம் வந்திறங்குகிற பயணிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். அவர்களில் பெரும்பாலானவரகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்தான்.
ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகிறவர்களில் 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் அறிகுறியில்லாதவர்கள். எஞ்சியவர்கள் தொண்டை வலி, இலேசான காய்ச்சல், உடல்வலி ஆகியவற்றால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கான பாரசிட்டமால் மாத்திரைகளைத் தருகிறோம். அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தர வேண்டிய தேவை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை மருத்துவ அதிகாரி ரிது சக்சேனா கூறுகையில்,
நாங்கள் இதுவரை 40 பேரை அனுமதித்துள்ளோம். 2 பேருக்கு மட்டுமே தொண்டை வலி, இலேசான காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு பாரசிட்டமால், ஆன்டிபயாடடிக் மருந்துகள் கொடுத்தோம். அறிகுறிகள் இல்லாத மற்ற நோயாளிகளுக்கு பல்வேறு வைட்டமின் மாத்திரைகளையே கொடுத்தோம் என்றார்.
ஒமைக்ரான் பற்றி மக்கள் பயந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் கருத்து மக்கள் அச்சத்தைப் போக்கும் வண்ணம் உள்ளது
- புதிய நாடாளுமன்ற கட்டிடம்… சு.வெங்கடேசன் எம்.பி. அதிர்ச்சி தகவல்புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு சென்ற மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் நாடாளுமன்ற கட்டிடம் குறித்த […]
- பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவுகோடை விடுமுறை முடிந்து ப ள்ளிகள் வரும் 7 ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் […]
- மேயர், ஆணையாளரின் உருவப்பொம்மைக்கு சால்வை அணிவித்து வரவேற்ற பெண் கவுன்சிலர்மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டு பகுதியில் மேயர் ஆணையாளரின் உருவப்பொம்மைகள் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு – […]
- சதுரகிரிமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது..விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை […]
- கோகுல்ராஜ் கொலை வழக்கு..யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள்ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் […]
- ஜூன் 9ல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைகுழு கூட்டம்..!தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த […]
- போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!
- பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆனது பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
- தென்காசி அருகே பிட்பாக்கெட் அடித்த மூதாட்டி கைதுதென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையத்தில் பிட்பாக்கெட் அடித்த மூதாட்டியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.புளியங்குடியில் இருந்து […]
- கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடுகலைவாணர் அரங்கில் நடைபெறும், நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை மேற்கு வங்க மாநில […]
- நீங்கள் எப்போதும் ராஜாதான்..! ” – முதலமைச்சர் வாழ்த்துஎங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” – முதல்வர் ஸ்டாலின் இளையராஜவுக்குபிறந்த […]
- ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்..!தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இனி தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 178: ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்தன்னதோடு அமை தூவித் தடந் தாள் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்பொருள் (மு.வ):தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் […]