• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர்..,

தூத்துக்குடி மாவட்டம்- விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் – மிளகுநத்தம் செல்லும் சாலையில் கல்லாற்றின் குறுக்கே கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.23-கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.

நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்து ராஜ் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் ஒன்றிய பொருளாளர் அரிபாலகிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி சத்தியராஜன் குதிரைகுளம் வேடநத்தம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆனந்த் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா சந்திரகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிளைச் செயலாளர்கள் மூக்கையா பெருமாள்,லட்சுமணன்,

கணேசன் கிளை அவைத்தலைவர் மாதவன் கிளை பிரதிநிதிகள் அதிலிங்கராஜ், முத்துகணேசன் மாணவரணி முத்து இருளப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.