• Fri. Apr 26th, 2024

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

ByA.Tamilselvan

May 4, 2023

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி ஹதிராஷ் ஹெச்.வர்மா (Hadirash H. Varma), மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் மோடி பெயர் குறித்து விமர்சித்தார் என்பது அவதூறு வழக்கு. இந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது.
இந்த பின்னணியில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி ஹதிராஷ் ஹெச்.வர்மா தற்போது ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக நியமிக்கபப்ட்டுள்ளார். ராகுல் காந்திக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்த நிலையில் நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது புதிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *