• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இளையான்குடி நீதிமன்றத்தில் இலவச சட்டப்பணி விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்த நீதிபதி

ByG.Suresh

Jun 15, 2024

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இளையான்குடி நீதிமன்றத்தில் இலவச சட்டப் பணி குழு மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிபதி ஹரிராம் கிருஷ்ணன் தலைமை வகித்து மொபைல் வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பிறகு பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி சம்மந்தமாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.