• Mon. Apr 29th, 2024

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி அளித்த மனு மீதான விசாரணை..,ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

Byவிஷா

Jun 15, 2023

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளார்.
இதனிடையே சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம், கைது நேரம் உள்ளிட்டவை குறித்து நீதிபதிகள் விசாரித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், அடுத்த விசாரணை வரும் ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *