• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திமுக-வின் அராஜகத்திற்கு முடிவு கட்டப்படும்!” – ஒட்டன்சத்திரத்தில் ஜி.கே. வாசன் பேட்டி..,

ByS.Ariyanayagam

Apr 14, 2026

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக-வின் சிண்டிகேட் அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தின் முதல் அணி என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரத்தில் தமாகா தலைவர் ஜி.கே., வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது மிகவும் வெட்கக்கேடானது. இதற்காக ஒவ்வொரு ஆணும் தலைகுனிய வேண்டிய நிலை இன்று இருக்கிறது. கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு எனப் பாதாளத்தை நோக்கிச் செல்லும் இந்த திமுக அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும். திமுக அரசை எதிர்க் கட்சியாகப் பார்க்காமல் எதிரிக் கட்சியாகப் பார்ப்பது வேதனையளிக்கிறது” எனச் சாடினார்.

மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டங்களை திமுக செயல்படுத்துவதில்லை விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய பணியை விவசாயம் சார்ந்த துறையிலே இருக்கின்ற அமைச்சர்கள் பொறுப்போடு செய்யவில்லை, பொறுப்பற்ற முறையிலே நடந்து கொண்டார்கள். விவசாயிகளுக்குச் செய்யக்கூடிய லாபத்தை நஷ்டமாக மாற்றக்கூடிய நிலையிலே முடிவை அவர்கள் எடுத்ததனுடைய விளைவு இன்றைக்கு விவசாயினுடைய வாழ்வாதாரம் குறைந்திருக்கிறது.

அதன் அடிப்படையிலே முதல்வர் அவர்கள் இது போன்ற தொகுதியினுடைய தோல்வி உறுதி என்ற பயத்தின் காரணமாக, மூன்று மாதத்திற்கு முன்பு முறையே சரியே விழிப்புணர்வுக்காக மத்திய அரசு வர்த்தக அமைச்சகம் எழுதிய கடிதத்தை இப்போது கூறி அதிலே குற்றம் கண்டுபிடிக்க நினைக்கிறார். அது இட்டுக்கட்டிய பொய் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

எல்லா மாநிலங்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையிலே கொள்முதல் செய்திடும்போது அதை முறையே முதலிலேயே செய்திருக்க வேண்டும். மேலும் மற்ற பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நம்முடைய நிதி அமைச்சருடைய கடிதத்தைக் கொச்சைப்படுத்தப் பார்க்கிறார், தவறாகச் சொல்கிறார். விவசாயிகளை அதன் அடிப்படையிலே ஏமாற்றப் பார்க்கிறார் தமிழக முதல்வர். அதற்கு நம்முடைய நிதி அமைச்சர் டெல்லியிலிருந்து தக்க பதிலைக் கொடுத்திருக்கிறார். விவசாயிகள் முகம் சுளிக்கும் வகையிலே திமுக நடந்து கொள்கிறது.

நான்கு முனைப் போட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் எத்தனை முனைப் போட்டி வந்தாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியே முதல் அணி மற்றும் வெற்றி அணி. பிற கட்சிகள் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்குச் சண்டை போட்டுக் கொள்ளலாம். நாங்கள் முதலிடத்தை ஏற்கனவே உறுதி செய்துவிட்டோம்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அமைச்சர் சக்கரபாணி குறித்துக் குறிப்பிடுகையில், “அவர் ஆறு முறை வெற்றி பெற்றிருந்தாலும், முறையற்ற செயல்பாடுகள், பண பலம் மற்றும் ஆட்பலத்தினால் தான் அது சாத்தியமானது. மக்களின் உணர்வுகளை மதிக்காததுதான் இந்தத் தேர்தலில் அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும்” என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.