புதுக்கோட்டை மாவட்ட வடக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் உள்ள காந்தி பூங்கா இடத்தில் மோடி அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிக அர்ஜுனா ஜி கார்கே அவமானப்படுத்தும் விதமான செய்த பாஜக மற்றும் அதன் இந்துத்துவ அமைப்புகளின் போக்கினை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்று மீது பொய் வழக்கு பதிந்த எஃப் ஐ ஆர் ஐ போட்டதை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடனடியாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே அவமானப்படுத்திய செயல்களை விதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெங்கட் அந்தோணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.





