மயிலாடுதுறையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளாத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி காட்டியது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அளிக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை எடுக்காமல் முறையாக பதில் வழங்குவதில்லை, கூட்டத்திற்கு சரிவர வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

இந்நிலையில் இதனை அறிந்த புதிய பொறுப்பேற்ற ஆட்சியர், இன்றும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வராமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி உமா மகேஸ்வரி ஆகியோரிடம் செல்பொனில் தொடர்பு கொண்டு ஏன் கூட்டத்திற்கு வரவில்லை எனவும், மனுக்களுக்கான உரிய நடவடிக்களும், பதிலும் அளிக்காது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களுக்கு அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று முறையாக பதில் அளிக்க வேண்டும் என்றும், சம்பளம் வழங்குவதில் 38 வது இடத்தில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் தற்போது முதலாவது இடத்தில் உள்ளதாகவும், இதே போல் அனைத்து துறைகளிலும் அனைவரும் முறையாக தங்களின் வேலைகளை செய்து பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்த மனுவிற்கு உடனடி தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடுமையாக கடிந்து கொண்டார். அடுத்து வரும் கூட்டங்களில் உயரதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதி பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்டம் முழுவதும் பம்பரம் போல் சுழன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு உதாரணமாக இந்த செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர்..,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியரே பலமுறை கலந்து கொள்ளாமல், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்டங்களை பெயரளவில் நடத்தி வந்த நிலையில், தற்போது ஆட்சியர் முறையாக கலந்து கொண்டு உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் என பாராட்டு தெரிவித்தனர்.
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]