• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நான்கு நாள் பயணம் முடிந்து சென்னை புறப்பட்ட முதல்வர்..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்கு பின்பு முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பிறகு ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்வது ஒரு வழக்கமான அரசியல் சென்டிமென்ட் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு, அவர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்குச் வந்தார். கடும் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு (ஏப்ரல் 21-ல் நிறைவு), முதல்வர் 4 நாட்கள் கொடைக்கானலில் தங்கி ஓய்வெடுத்தார். கொடைக்கானலில் உள்ள குடிநீர் தேக்கப் பகுதிக்குச் சென்றபோது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்கள் தொடர்பு: காலை நடைப்பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். சைக்கிள் ஓட்டியும், நடை பயிற்சி செய்தும், பொது மக்களிடம் கலந்துரையாடியும் மகிழ்ச்சியுடன் இருந்தார்.

சென்டிமென்ட்: 2019 மற்றும் 2021 தேர்தல்களுக்குப் பிறகும் அவர் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். சாலை மார்க்கமாக அவரது கார் மதுரை புறப்பட்டு சென்றது. வழிநெடுக்கிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.