காவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் அருகே உள்ளது வீராணம்.இந்த பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் (வயது 46) நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.கோஷ்டி மோதல் தொடர்பாக இரண்டு தரப்பினர் மோதலில் ஈடுபட்டபோது ரவுடி ஆனந்த் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இந்த கொலை தொடர்பாக ஏழு பேரை காரிப்பட்டி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ரவுடி ஆனந்த்கொலை குறித்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.ரவுடி ஆனந்தின் சடலத்தை காரிப்பட்டி போலீசார் கைப்பற்றி உடல் கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அனுப்பி வைத்தனர்.இதனை அறிந்த ரவுடி ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சேலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூட்டம் முன்பாக இன்று காலை திரண்டனர்.அப்போது ஆனந்தின் நண்பர்கள் சிலர் காவல் துறை அதிகாரிகளிடம் ரவுடி ஆனந்தின் சடலத்தை சேலம் பொன்னம்மாப்பேட்டை மற்றும் வீராணம் வழியே காட்டூருக்கு எடுத்துச் செல்ல அனுமதி தர வேண்டும்.இல்லையெனில் கடை அடைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் செய்வோம் என தெரிவித்தனர்.
பொன்னம்மாபேட்டை வழியே சடலத்தை எடுத்து சென்றால் இரண்டு தரப்பினருடைய தகராறு ஏற்படும் என தெரிவித்து பொன்னம்மாப்பேட்டை வழியே சடலம் எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர் .இதனால் கோபமடைந்த ஆனந்தின் நண்பர்கள் சடலத்தை வாங்க மறுத்து காவல்துறை அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பிரேத பரிசோதனை கூடம் முன்பு குவிக்கப்பட்டனர் .
சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா உடனே பிரேத பரிசோதனை கூடம் முன்பு வந்து ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து சமாதானப்படுத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது ஆனந்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறும் தாங்கள் சடலத்தை எடுத்து சென்று இடுகாட்டில் இறுதி சடங்குகளை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.இதன் பிறகு உறவினர்களிடம் ரவுடி ஆனந்தின் சடலம் வழங்கப்பட்டது .அவர்கள் ஆம்புலன்ஸ் வேனில் சடலத்தை எடுத்து வீராணத்துக்கு எடுத்துச் சென்றனர்.இதன் பிறகு பிரேத பரிசோதனை கூடம் முன்பு திரண்டு இருந்த ஆனந்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேற்கொண்டு ஏதும் பிரச்சினை செய்யாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த பிரச்சினையால் சேலம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]