

2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் பா.ம.க. தன் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு இருக்கிறது.
பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்:
*தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.
*பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும்.
*குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 2000.
*கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1,000
*தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
*சென்னையில் மாநகர பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயணம்.
*2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய்க் கணக்கில் ரூபாய் 55,034 கோடி உபரியாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை ரூபாய் 18,326 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும்.
*தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவிதம் இடஒதுக்கீடு.
*தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நோக்குடன் 2022-2023ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.
*2022-2023 ஆம் வருடத்தில் அரசுத்துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
*முன்பே முடக்கி வைக்கப்பட்டு உள்ள 80,000 காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் வாயிலாக நடப்பு ஆண்டில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

