ஒரு காலத்தில் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் இருந்து அதிக திரைப்படங்கள் தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட நிலையில், இப்போது தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யும் டிரெண்ட் மாறியுள்ளது! அந்தவகையில், இந்த ஆண்டில் லோகேஷ் கனகராஜின் இரண்டு படங்கள் உள்ளிட்ட மொத்தம் தமிழ் 6 படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளன.
யு டர்ன் (U Turn)
தமிழ் மற்றும் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யு டர்ன். சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமான இதில், சமந்தாவின் நடித்திருந்தார்! பாலகுமாரன் படத்தை இயக்கியிருந்தார்! இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஆல்யா எஃப் நடிக்கிறார். ஏக்தா கபூர் புரோடக்சன் படத்தை தயாரிக்கிறது.


சூரரைப் போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தை துவங்கிய கோபிநாத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது. சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விக்ரம் வேதா
மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தை புஸ்கர் – காயத்திரி இயக்கியிருந்தனர். போலீஸ், வில்லன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் மாஸான நடிகர்கள் நடித்து, படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதேபெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் நடிக்கின்றனர்.

அருவி
எய்ட்ஸ் நோயாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அருவி. லீட் ரோலில் அதிதி பாலன் நடித்தார். அருண் பிரபு புருஷோத்தம்மன் குறைந்த பட்ஜெட்டில் எடுத்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியில் ரீமேக்காகும் அருவி திரைப்படத்தை இயக்குநர் ஈ நிவாஸ் இயக்க உள்ளனர். ஃபாத்திமா சானா ஷாயிக் லீட் ரோலில் நடிக்கிறார்.
மாஸ்டர்
இளைய தளபதி விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார். வசூலில் சாதனை படைத்த இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சல்மான்கான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கும் ஹிந்தி மாஸ்டரை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.


கைதி
நடிகர் கார்த்தி மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளியான படம் கைதி. ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், செம ஹிட் கொடுத்தது. வியாபார ரீதியாகவும் நல்ல கலெக்ஷனைக் கொடுத்த இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார். ஹிந்தியில் BHOLAA என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]
- தமிழ், தெலுங்கில் டப் ஆகும் பிரபல சீரிஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்…நெட்பிளிக்ஸின் பிரபல சீரிஸான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தமிழிலும் தெலுங்கிலும் டப் ஆக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் […]
- இன்று பிரதமர் வருகை -சென்னையில் போக்குவரத்து மாற்றம்பிரதமர்மோடிசென்னை வரவுள்ளதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போக்குவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர […]
- பாஜக நிர்வாகி படுகொலை- 4 ரவுடிகள் கைது!பாஜக நிர்வாகி பாலச்சந்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.சென்னை […]
- இனி திருமண சான்றிதழை இணையதளத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்… அரசு அறிவிப்புதமிழகக்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். […]
- முதல் பெண் போர் விமானி அபிலாஷா பாரக் பதவியேற்புஇந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் பதவியேற்றார்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் […]
- படிப்பு, தங்குமிடம், உணவு என்று அத்தியாவசியம் அனைத்தும் வழங்குகிறோம்…சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் […]