• Fri. Apr 19th, 2024

கன்னியாகுமரி அழகப்பபுரம் பகுதியில் கண்காணிப்புகேமிரா -விஜய் வசந்த் எம்.பி துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகப்பபுரம் பேரூராட்சி சிசிடிவிகேமிரா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விஜய் வசந்த் எம்.பி துவக்கி வைத்தார்.
அழகப்பபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் அனிற்ற ஆன்றோஸ்மணி பேரூராட்சி பகுதி முழுவதும் சிசிடிவிகேமிரா அமைக்க தனது சொந்த நிதியில் ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்தார். கேமிரா அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்K.T. உதயம் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அழகப்பபுரம் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் ஆன்றோஸ்மணி, வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் சேம்சுரேஷ்குமார்,AICC உறுப்பினர் ஆரோக்ய ராஜ், பேரூராட்சி செயல்தலைவர் தங்கராஜ், வடக்கு வட்டார தலைவர் காலபெருமாள், மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கிங்சன், அமைப்பு செயலாளர் சுபுகான், நடராஜன், சுபாஷ், ஹெலன், அருண்டிசாசோ, ஜெஸ்டின், மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி மன்றத் உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *