• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தளத்தில் குருத்து ஓலை ஞாயிறு வழிபாடு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் குரு தோலை ஞாயிறு வழிபாடு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலிக்கு திருத்தல பங்குத்தந்தை ரமேஷ் அடிகளார் தலைமை தாங்கி திருப்பலி நடத்தினார்.

இதில் அதிகாலை 5.30 மணிக்கும், காலை 8 மணிக்கும், மதியம் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராள மான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் குருத்து ஒலையை கையில் ஏந்திய படி குருத்தோலை ஞாயிறு சிறப்புகள் பற்றி வழிபாட்டு பாடல் கள் பாடியபடி திருத்தலத்தை வலம் வந்தனர்.