
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மார்ச் 25ம் தேதி, காலை தொடங்கியது.


கோயிலில், உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் ரொக்கமாக ரூபாய் 28,31,442-ம், தங்கம் 170 கிராம், வெள்ளி 1950 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் துணை ஆணையர் கலைவாணன் தெரிவித்தார்.

