டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான மாணவர்கள் அர்ஷத் யூசுஃப், இனியாத் அல்தாஃப் மற்றும் சௌகத் அகமது கனய். இவர்கள் மூவரும் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவிலுள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இதனையடுத்து இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியின் வெற்றியை மூன்று மாணவர்களும் வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகள் பகிர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த குறுஞ்செய்திகள் காட்டுத்தீ போல பரவியதையடுத்து ஆக்ரா போலீசார் மூன்று மாணவர்களையும் அக்டோபர் 27ம் தேதி கைது செய்தனர். மூவர் மீதும் இணைய பயங்கரவாதம்,தேசத்துரோகம்உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆக்ரா சிறையில் அடைத்தனர்.
சமூக வலைத்தளங்களின் மூலமே இதுதொடர்பான தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், அவர்களை ஜாமீனில் எடுக்கக் கடந்த 3 மாதங்களாகப் போராடி வருகின்றனர். மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டதில்லை என்ற அவர்கள், கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் என கூறி புகாரை வாபஸ் வாங்குமாறு உத்தர பிரதேச அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், அதற்கு உத்தர பிரதேச அரசு செவிசாய்க்கவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக ஆக்ராவைச் சேர்ந்த எந்த வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில் அண்டை மாவட்டமான மதுராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியுள்ளார். மாணவர்களின் பெற்றோர் ஜாமீனுக்கு விண்ணப்பித்தும் ஆக்ரா நீதிமன்றம் இதுவரை 8 முறை அதனை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு பயணம் மறக்க முடியாத ஒன்று… மோடி ட்விட்…தமிழகத்தில் 36 ஆயிரம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று […]
- லடாக் வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலிலாடக் பகுதியில் நிகழ்ந்த வாகனவிபத்தில் ராணுவ வீரர்கள் சென்று வாகனம் சிக்கி 7பேர் பலியாகியுள்ளனர்.லடாக்கின் துர்துக் […]
- 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்புஉலக முழுவதும் கொரோனா தொற்று ஏற்றம் இறக்கம்த்தோடு காண்ப்படுகிறது. இந்தியாவில் 2000க்குள் இருந்த தொற்று எண்ணிக்கை […]
- நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் […]
- போதைப்பொருள் வழக்கில் ஷாருக் கான் மகன் விடுவிப்பு..!பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைபொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.தற்போது போதிய ஆதாரம் […]
- ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் என்பது ஏற்கத்தக்கதல்லஇருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் அப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் 2000 […]
- மீண்டும் பிகில் ராயப்பன் என்ட்ரியா..?? அட்லி சொன்ன பதில்..தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி படம் மூலம் அட்லி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு […]
- பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க வேண்டாம்… ஷாருக்கான், அஜய்தேவ்கனுக்கு கடிதம் எழுதிய ரசிகை..பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் […]
- லெஜண்ட் படத்தின் ஆடியோ லான்ச்… 10 முன்னனி நடிகைகள் அழைப்பு…லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே […]
- 10,12ம் வகுப்பு படித்திருந்தால் போதும் மத்திய அரசு வேலை ரெடிஅரசு வேலை என்றாலே சந்தோசம் அதிலும் மத்திய அரசு வேலை என்றால் சொல்லவா வேண்டும்.. மத்திய […]
- பிளஸ்1 படிக்கும் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைதமிழக்ததை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைகிடைத்துள்ளது.தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் […]
- புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடைஇளைஞர்களின் உடல்நலன் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு மேலும் ஒராண்டுதடைவிதித்து தமிழக அரசு […]
- பள்ளி குறித்த திட்டங்களுக்கு தமிழில் பெயர்… முதல்வர் பேச்சுதமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நல்ல திட்டங்களை […]
- யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது […]
- ஸ்டாலினின் மோசமான நடத்தையை கண்டு வெட்கி தலைகுனிகிறேன் -அண்ணாமலை டூவிட்பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை […]