• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மாணவன் வீட்டின் அருகே கிணற்றில் சடலமாக மீட்பு..,

ByS. SRIDHAR

Nov 5, 2025

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது 17 வயது மகன் சிலம்பரசன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் உள்ள வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் சிலம்பரசனுக்கு வேளாண்மை கல்லூரியில் பயில விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி சிலம்பரசன் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் பின்னர் கல்லூரிக்கு செல்லாமல் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிலம்பரசனின் தந்தை அமரேசன் சிலம்பரசனை வேளாண்மை கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று கண்டித்து பின்னர் சிலம்பரசனை வேளாண்மை கல்லூரிக்கு அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டுவிட்டு பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிலம்பரசனிடம் இருந்த மொபைல் ஃபோனையும் அவரது தந்தை அமரேசன் பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வேளாண்மை கல்லூரியில் படிக்க விருப்பமில்லாமல் இருந்த சிலம்பரசனுக்கு அவர் பயன்படுத்தும் செல்போனையும் அவரது தந்தை பிடுங்கி வைத்துக் கொண்டதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சிலம்பரசனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பன்னீர் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சிலம்பரசனின் உடல் மிதந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் சிலம்பரசனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிலம்பரசனின் பெற்றோர் சிலம்பரசன் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினரும் மழையூர் காவல்துறையினரும் சென்ற நிலையில் கிணற்றில் சடலமாக கிடந்த சிலம்பரசனின் உடலை தீயனைப்புத் துறையினர் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் மாணவன் சிலம்பரசன் வேளாண்மை கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில் தொடர்ந்து அதே கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அவரது தந்தை வற்புறுத்தியதாலும் அவரது மொபைல் ஃபோனை பிடுங்கி வைத்துக் கொண்டதாலும் மன உளைச்சல் ஏற்பட்டு சிலம்பரசன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் சிலம்பரசனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மழையூர் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மழையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.