மதுரையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்டுள்ள வட்டாட்சியர், நில அளவையர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட அனுப்பானடி பாலகுமார் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மதுரை அனுப்பானடியில், வசித்து வரும் எங்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனுக்கும் நிலம் அத்துமால் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் நிலத்தை அளவீடு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய தெற்கு தாசில்தார், நில அளவையர், மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டது. அதிகாரிகள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்காமல், நீதிமன்றத்திற்கு எதிராகவும் சுப்பிரமணியன் அவருக்கு சாதகமாக எங்களது வீட்டின் பின்புறம் உள்ள சுவர் முழுவதையும் இடித்து தள்ளினார்.
நீதிமன்ற ஆனைப்படி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், ஆகியோர் முறையாகக் கையாளாமல் எதிர்தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தங்கள் அரசு பதவியை முறைகேடாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து நீதிமன்ற தீர்ப்பையும் வருவாய்த்துறை அரசாணையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தகவல் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டை இடிப்பதற்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கூறிய நிலையில், உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இது சம்பந்தமாக முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டு எங்களுடைய புகார் கடிதத்தை ரத்து செய்தது, மட்டுமில்லாமல் அரசு அதிகாரிக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவும், அதனால் எங்களுடைய குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம் எனக் கூறினர்.
- முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்திமல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்பாஜக […]
- செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது -முதல்வர் மு .க ஸ்டாலின்.மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என […]
- பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த […]
- புது நாடாளுமன்றம் திறக்கும் நாளில் நிலநடுக்கத்தால் குலுங்கிய தலைநகர் டெல்லிவரலாற்றுச் சிறப்புமிக்க புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில், இன்று டெல்லி […]
- ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு […]
- முதல் நாளே பிரச்சனை-புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் கைது
- உலகபட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 1000 பேருக்கு மதிய உணவுஉலகபட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1000 பேருக்கு மதிய உணவு […]
- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!..வெயில் படிப்படியாக குறையும்தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது.வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக […]
- மருத்துவகல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து-தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்மருத்துவக்கல்லூரிக்கான அங்கீராரம் ரத்து செய்யப்பட தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கே காரணம் என […]
- பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா ரத்து -ஏற்புடையதல்ல! – எஸ்.டி.பி.ஐ.மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல! – […]
- 2023 ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு..கோப்பையை வெல்லுமா சென்னை அணி?ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இன்று இரவு மோதுகின்னறன. இன்றுடன் 2023 ஐபிஎல் […]
- மதுரையில் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்குமதுரை பாண்டிகோவில் பகுதியில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- […]
- ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய […]
- இன்று இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் நினைவு நாள்பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் […]
- கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழாகலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு […]