தென்கொரியாவில் மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் புது வடிவ மாஸ்க் ஒன்றை தயார் செய்துள்ளது அட்மான் என்ற நிறுவனம். கொரோனா இன்னும் உலகை விட்டு முழுமையாக நீங்காத நிலையில், அதன் வேறுபாடுகள் உள்ள வைரஸ்கள் வரத்தொடங்கியுள்ளன! கொரோனா வந்த நாள் முதல் இன்று வரை, அதை எதிர்கொள்ள வித விதமான தடுப்பூசிகள், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன!
அத்தகைய கொரோனாவின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று தான், மாஸ்க் என்னும் முகக்கவசம்! பள்ளி, கல்லூரிகள், பணியிடங்கள், மருத்துவமனை மற்றும் பீச், தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்கள் என எங்கு சென்றாலும் 2 ஆண்டுகளாக தவறாமல் நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள் மாஸ்க் தான். மாஸ்க் அணிவதன் முக்கிய பிரச்னையாக கருதப்படுவது, இந்த மாஸ்க் போட்டுக் கொண்டு வெளி இடங்களில் எப்படி சாப்பிடுவது, தண்ணீர், கூல்டிரிங்க்ஸ் எப்படி குடிப்பது? என்பதுதான்!
அதற்கு தான் விடை தருகிறது தென் கொரிய நிறுவனங்களின் புதிய வகை மாஸ்க் ஒன்று! அதற்கு பெயர்தான் ‘கோஸ்க்’. கோ என்றால் தென்கொரிய மொழியில் மூக்கு என்று அர்த்தமாம். அதை மாஸ்க் உடன் இனைத்து கோஸ்க் என பெயர் வைத்துள்ளார்கள்.
மூக்கு பகுதியை மட்டும் மூடிவிட்டு, வாய் பகுதியை அப்படியே விட்டுவிடும் வகையில் இந்த மாஸ்க்கை தயார் செய்துள்ளது அட்மான் நிறுவனம். ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். கே.எஃப்.80 என்ற பெயரில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்றொரு வடிவமைப்பு கொண்ட கோஸ்க், எப்போதும் போல முகத்தையும், வாயையும் மூடும் வகையில் இருக்கும். ஆனால், அதை வாடிக்கையாளர்கள் மடித்துக் கொள்ளலாம். இந்த கோஸ்க் குறித்த செய்தி, கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என கருதும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது. சுமார் 0.3 மைக்ரான் அளவு சிறிய துகள்களையும், கிருமிகளையும் தடுக்கக் கூடிய அளவில் 80 சதவீத செயல்திறன் கொண்டதாக இந்த கோஸ்க் இருக்கிறதாம்.
- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]