மதுரையில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் நகர் சார்பாக ரமலானை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் மதுரை வடக்கு, கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் நகர் சார்பாக ஏழை எளிய ஊருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கிழக்கு ஒன்றிய தலைவர் அப்துல்கரீம் தலைமையிலும் சக்கிமங்கலம் நகர செயலாளர் சபியுல்லாகான் வடக்கு மாவட்ட அமைப்பாளர் பசுருதீன் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நசுருதீன் வடக்கு மாவட்ட தலைவர் பிலாலூதின்ஆகியோர் கலந்து கொண்டுஏழைஎளியோர் கண் பார்வையற்றவர்கள், நரிக்குறவர்கள் மக்களுக்கு ரமலான் நோன்பை முன்னிட்டு சேலை வேஷ்டி 400க்குமேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்இந்த விழாவில் நலத்திட்டம் பெற்ற அனைவரும் நிர்வாகிகளை வாழ்த்தி சென்றனர் இவ்விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்