வாக்குப்பதிவை அதிமுக முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 மாதங்களாக நடக்கும் திமுக ஆட்சியை பொதுமக்கள் எடைபோட்டு, தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் வழிவந்த அதிமுக ஆட்சியை எண்ணிப் பாருங்கள். அதிமுக ஆட்சி, தமிழக மக்களின் ஆட்சியாக, உண்மையான மக்களாட்சியாக திகழ்ந்ததை வரலாறு சொல்லும்.
நீட் தேர்வு ரத்து, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, சமையல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், விவசாயக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலைகுறைப்பு என பொய்யான வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 9 மாத ஆட்சியில், திமுகவினரின் வன்முறையும், அராஜகமும், அடாவடியும் எண்ணில் அடங்காதவை. நகர்ப்புற உள்ளாட்சிமன்றங்களிலும் திமுகவினருக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால் குறுநில மன்னர்களாகவும், கொடுங்கோல் தண்டல்காரர்களாகவும், மக்களுக்கு தரப் போகும் தண்டனைகளை அவர்களது கடந்தகால வரலாறு நம் கண் முன்னே நிறுத்துகிறது.
அதிமுகவினர் மேயர்களாகவும், நகர மற்றும் பேரூராட்சி மன்றத்தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்தபோது அன்பாகவும், பணிவாகவும், தொண்டு செய்யும் ஊழியர்களாகவும் பணியாற்றினர் என்பதை எண்ணிப் பாருங்கள். வன்முறையை வெறுக்கின்ற, சகோதரத்துவ சமத்துவத்தை விரும்புகின்ற எளிய மக்களின் இயக்கம்தான் அதிமுக.கட்டுப்பாடுகள் இல்லாமல் அராஜக ஆட்சி நடத்திவரும் திமுக ஆட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தக்க கடிவாளம் போடப்பட்டால் மட்டுமே, அவர்களை கட்டுப்படுத்தி தமிழகத்தை அமைதிபூங்காவாக காப்பாற்ற முடியும்.
வாக்குப்பதிவை அதிமுக முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அதை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை அளித்து, அதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்று சாதனை படைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]
- சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்ட சட்ட […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அன்னதானம் வழங்கி வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஏழாம் நாள் மண்டகப்படி விஸ்வகர்மா […]
- 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் -சரத்குமார் பேச்சுஇன்னும் 150 ஆண்டுகள் வரை நான் உயிருடன் இருப்பேன் என சமக பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் […]
- ஓபிஎஸ் -சசிகலா ஜூன் 7ல் சந்திப்பு?தஞ்சாவூரில் வரும், 7ம் தேதி நடக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில், பன்னீர்செல்வமும், […]
- ஜி.எஸ்.எல்.வி.எப்-12′ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்ததுதரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.இந்த […]
- சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஆளுநர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் கல்வி இன்டர்நேஷனல் பொதுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் […]
- பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரின் சுயசரிதை நூல் வெளியீடுபி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையை புத்தகமாக எழுதி […]
- மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் செயின் பறித்த கொள்ளையன் சிக்கினான்மதுரை சோழவந்தான் அருகே துணிகரம் வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கட்டிபோட்டு 5 சவரன் தங்க […]
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துதிடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்து விருதுநகர் அருகே […]
- மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் […]