வாக்குப்பதிவை அதிமுக முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 மாதங்களாக நடக்கும் திமுக ஆட்சியை பொதுமக்கள் எடைபோட்டு, தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் வழிவந்த அதிமுக ஆட்சியை எண்ணிப் பாருங்கள். அதிமுக ஆட்சி, தமிழக மக்களின் ஆட்சியாக, உண்மையான மக்களாட்சியாக திகழ்ந்ததை வரலாறு சொல்லும்.
நீட் தேர்வு ரத்து, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, சமையல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், விவசாயக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலைகுறைப்பு என பொய்யான வாக்குறுதிகள் மூலம் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 9 மாத ஆட்சியில், திமுகவினரின் வன்முறையும், அராஜகமும், அடாவடியும் எண்ணில் அடங்காதவை. நகர்ப்புற உள்ளாட்சிமன்றங்களிலும் திமுகவினருக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால் குறுநில மன்னர்களாகவும், கொடுங்கோல் தண்டல்காரர்களாகவும், மக்களுக்கு தரப் போகும் தண்டனைகளை அவர்களது கடந்தகால வரலாறு நம் கண் முன்னே நிறுத்துகிறது.
அதிமுகவினர் மேயர்களாகவும், நகர மற்றும் பேரூராட்சி மன்றத்தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் இருந்தபோது அன்பாகவும், பணிவாகவும், தொண்டு செய்யும் ஊழியர்களாகவும் பணியாற்றினர் என்பதை எண்ணிப் பாருங்கள். வன்முறையை வெறுக்கின்ற, சகோதரத்துவ சமத்துவத்தை விரும்புகின்ற எளிய மக்களின் இயக்கம்தான் அதிமுக.கட்டுப்பாடுகள் இல்லாமல் அராஜக ஆட்சி நடத்திவரும் திமுக ஆட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தக்க கடிவாளம் போடப்பட்டால் மட்டுமே, அவர்களை கட்டுப்படுத்தி தமிழகத்தை அமைதிபூங்காவாக காப்பாற்ற முடியும்.
வாக்குப்பதிவை அதிமுக முகவர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அதை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை அளித்து, அதிமுக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்று சாதனை படைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]