• Mon. Apr 29th, 2024

மஞ்சூரில் சோனியா காந்தியின் 74 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியாகாந்தி பிறந்தநாள் விழா குந்தா வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்தலைவர் நேரு தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர், பாரத்ஜோடோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.நாகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


மாவட்ட செயலாளர் ஆர்மி ராஜ்குமார் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் உசேன், வட்டார துனைத்தலைவர் மட்டக்கண்டி போஜன், கீழ்குந்தா சிவக்குமார், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *