• Fri. May 3rd, 2024

மதுரையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நாயின் உயிரை காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதித்த சமூக ஆர்வலர்கள்

ByKalamegam Viswanathan

Jan 2, 2024

மதுரை அண்ணா நகர் பீமராஜ் ஜெகதீசன். இவர் தனது அலுவலகம் அருகே காரை வழக்கமாக ஒரு இடத்தில் நிறுத்தி வந்துள்ளார். இந்த இடத்தில் இரண்டு தினங்களாக ஒரு குட்டி நாய் உடல்நிலை சரியில்லாமல் நடக்க முடியாத அளவில் படுத்திருப்பதை உணர்ந்த இவர், அந்த நாயை தனது காரில் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சென்று சோதனை செய்த போது அந்த தெரு நாய்க்கு பக்கவாத நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த தெரு நாய் காப்பாற்றப்பட்டு மதுரை கோச்சடை பகுதியில் உள்ள வெட்னரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *