• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் சற்றே அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு!..

Byமதி

Oct 14, 2021

தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று ஆயிரத்து 289 ஆக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 280 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம் 13 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

முந்தைய தினம் 18 ஆக பதிவான கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 453 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 ஆயிரத்து 650 பேர் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.