• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை, மருத்துவமனையில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சந்தித்து நலம் விசாரித்தார்…

ByKalamegam Viswanathan

Nov 3, 2023

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது திருப்பத்தூரிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் அவர்கள் சந்தித்து விபத்து குறித்தும் சிகிச்சை எப்படி வழங்கப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலளார்கள் செல்வமணி,அருள்ஸ்டிபன், மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து ஒன்றிய செயலாளர் கோபி மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.