• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை இரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு வழங்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கையெழுத்து இயக்கம்…

ByKalamegam Viswanathan

Nov 6, 2023

மதுரை இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரைவார்க்க நினைக்கும் ஒன்றிய அரசின் செயலை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில், அரசரடி ரயில்வே மைதானம் முன்பு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் என பலரும் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றனர்.