ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8.29 மணியளவில் நடந்துள்ளது. படுகாயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்..
ஷின்ஸோ அபே, சுயநினைவின்றி இருப்பதாகவும், மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஜப்பான் ஊடகம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை நிலவரம் இன்று மாலைக்குள் வெளியாகலாம்