கேஜிஎஃப் படத்தில் வருவதுபோல தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றுக்காக மூன்று நாடுகள் சண்டை போட்டு வரும் சம்பவம் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தில் ஹீரோ ராக்கி பாய் தங்கம் அனைத்தையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு கடலில் சென்று கப்பலோடு மூழ்கிவிடுவார். அதுபோன்ற சம்பவம் ஒன்று வரலாற்றில் நடந்துள்ளது. 1700களில் கடலில் யார் ஆதிக்கம் செலுத்துவது என ஐரோப்பிய நாடுகள் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. மத்திய கிழக்கு, ஆசிய கடல் பகுதிகளில் பிரிட்டிஷ் ஆதிக்கம் செலுத்தியது போல, தென் அமெரிக்கா மற்றும் ஆர்டிக், அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலிருந்து ஏராளமான தங்கம், வெள்ளி, மரகத கற்களை சுமந்து கொண்டு புறப்பட்ட ஸ்பெயின் கடற்படை கப்பலான சான் ஜோஸ் 1706ம் ஆண்டு கொலம்பியா கடல் பகுதியில் பிரிட்டிஷ் கப்பலுடன் போரிட்டது. இதில் தீப்பற்றிய சான் ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கி மாயமானது.
300 வருடங்களுக்கு முன்பு மாயமான கப்பலின் எச்சத்தை கடந்த 2015ம் ஆண்டில் கண்டுபிடித்துள்ளனர். அதை கொண்டு அமெரிக்காவின் எம்.ஏ.சி என்ற நிறுவனம் அக்கடல் பகுதியில் நடத்திய ஆய்வில் கடலில் 3,100 அடி ஆழத்தில் கப்பல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் உள்ள தங்கம் உள்ள பொக்கிஷங்களின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி 1.32 லட்சம் கோடி ரூபாய் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த புதையல் தங்களுக்குதான் சொந்தம் என அமெரிக்காவின் எம்.ஏ.சி நிறுவனம், ஸ்பெயின் மற்றும் கொலம்பியா நாடுகள் குடுமிபிடி சண்டையில் இறங்கியுள்ளன.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]