பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில் அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே இறுதிகட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அவரது உடலையும் காட்டியது.ஆனால், புலிகளின் தீவிர ஆதரவாளர்களான பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவே கூறி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், பிரபாகரன் தொடர்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.