[11:37 AM, 6/12/2022] ts3236946: கோடைவிடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தொற்று குறைவாக இருந்ததால் முககவசம அணிவது குறைந்து வந்தது.தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை முதல் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டுமென சென்னை உள்பட பல்வேறு பெருநகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பெற்றோர்களுக்கு குறுந் தகவல்கள் சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளன. அதேசமயம் நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்துமா என்பது குறித்து அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கொரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அப்படியே உள்ளன. எனவே, பள்ளி செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், மாணவ-மாணவிகள், கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். கோடை விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் திறக்கும் சூழ்நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்தை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கொரோனா நோய்த்தொற்றும் உயர்ந்து வருவதால் தூய்மைப் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு..ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி […]
- இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]
- நடிகை அம்பிகா ராவ் மறைந்தார்…மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் […]
- அதிமுக பொதுக்குழு- இபிஎஸ் அதிரடி முடிவுஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண […]
- பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு நாடு முழுவதும்தடை..!இந்தியா முழுவதும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய […]
- விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்புதமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு […]
- ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டுமதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு. ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை .மதுரை […]
- மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் […]
- அங்கன்வாடி ஊழியரின் மகனுக்கு ஃபேஸ்புக்கில் வேலைகூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கொல்கத்தாவைச் சேர்ந்த அங்கான்வாடி ஊழியரின் மகன் […]
- கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்..? பட்டியலை வெளியிட்ட கூகுள்…2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை […]
- அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்வரும் ஜூலை 11 அதிமுகபொதுக்குழு ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது […]
- சசிகலா-ஓ.பி.எஸ் சுவரொட்டிகள் கிழிப்பு -மதுரையில் பரபரப்புமதுரையில் சிசிகலா -ஓபிஎஸ் சுவரொட்டிகள் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]
- தமிழகத்தை உலகமே உற்று நோக்குகிறது – ஸ்டாலின்செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் உலகமே தமிழகத்தை உற்று நோக்கிறது என ஸ்டாலின் பேச்சுசென்னையில், […]
- மாஸ்க் போடலன்னா மது இல்ல..!சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை […]
- காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,சிவகங்கை […]