• Fri. May 10th, 2024

பிறந்த தினத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்த பள்ளி மாணவன்..,

ByKalamegam Viswanathan

Jul 24, 2023

மதுரை ஒத்தக்கடை பகுதியை சார்ந்த இயற்கை ஆர்வலர் பாரதிதாசன் அவர்களது மகன் பா.யோகேசன் நாகமலை புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 10 ம் வகுப்பு பயின்று வருகிறார்.
தனது பிறந்ததினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்திட ஆர்வம் காட்டி, தனது தந்தையை அழைத்து தான் சேமித்த தொகையினை தந்தையிடம் வழங்கி மரக்கன்றுகள் வாங்கித்தருமாறு கேட்டு கொண்டதற்கிணங்க தேசிய மரமான ஆலமரம் 2 மரக்கன்றுகளை அவரது தந்தை வாங்கி வர பசுமை ஆசிரியர் ஸ்டாலின் அவர்கள் உதவியுடன் அவரது முன்னிலையில் சக மாணவ, நண்பர்களையும் பசுமை பணியில் ஊக்குவிக்கும் விதமாக அவர்களது கரங்களாலும் நடச்செய்து தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

இந்த மாணவனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *