• Thu. Apr 25th, 2024

தஞ்சாவூரில் இன்று முதல் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா..

தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா இன்று (மார்ச் 19) முதல் 3 நாட்களுக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சசிகலா, நேற்று யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்தார். தனது இல்லத்தில் இன்று (மார்ச் 19) முதல் மார்ச் 21-ம் தேதி தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார்.

நாளை (மார்ச் 20) சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. அதையொட்டி, தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள ம.நடராஜனின் நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்த உள்ளார் என சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *